அந்தோனியார் பல்நோக்கு கருத்தரங்க மையம்

முகப்புகருத்தரங்க மையம்

மையத்தைப் பற்றி

அந்தோனியார் பல்நோக்கு கருத்தரங்கம் என்றழைக்கப்படும் இந்த மையம் பங்கின் ஆன்மீக, கல்வி மற்றும் சமூக நிகழ்ச்சிகளுக்காக உருவாக்கப்பட்ட பல்நோக்கு அரங்கமாகும். மரியானுஸ் நகர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், ஆன்மீக வளர்ச்சியை ஊக்குவிக்கவும், கல்வி மற்றும் சமூக விழிப்புணர்வை வளர்க்கவும் இவ்வரங்கம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இம்மையம் ஏன் உருவாக்கப்பட்டது?

1

எம்பகுதியிலுள்ள மக்கள் பெரும்பாலானோர் பட்டாசுத் தொழில் மற்றும் அச்சு தொழில் செய்து வருகின்றனர் — இந்த நிலையை மாற்ற.

2

எம்பங்கிலுள்ள மக்கள் 2002 ஆம் ஆண்டு வரை மட்டுமே அரசு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் — இந்நிலை மாற முனைப்போடு இம்மையம் கட்டப்பட்டுள்ளது.

3

வறுமையின் காரணமாக மக்கள் அதிகம் படிக்காமல் தொழிற்சாலைகளில் வேலைக்குச் சென்றனர் — இதை மாற்ற பயிற்சி வகுப்புகள் நடத்துதல்.

4

நாள்வட்டி, வாரவட்டி, மாதவட்டி என வட்டிக்கு பணம் வாங்கி தம் வாழ்நாட்களைக் கழிப்போரை நிதி சுயசார்பு நோக்கி வழிநடத்துதல்.

5

எம்பங்கிலிருந்து இதுவரை ஒரு அருட்சகோதரியோ அருட்சகோதரனோ இறை பணிக்கென்று மனமுவந்து சென்றதில்லை — இந்நிலை மாற வழி செய்தல்.

6

இவ்வற்றை எல்லாம் மாற்ற எடுத்த முதல் முயற்சியே இந்த அந்தோனியார் பல்நோக்கு கருத்தரங்க மையமாகும்.

வசதிகள்

இருக்கை வசதி

அமர்வு ஏற்பாடு

ஒலி அமைப்பு

ஒலிபரப்பு வசதி

திரை & திட்டி

காட்சி வசதி

மேடை இடம்

நிகழ்ச்சி மேடை

குளிர்சாதன வசதி

விசிறி / காற்றாடி

வெளிச்ச அமைப்பு

ஒளியூட்டல் வசதி

நடத்தப்படும் நிகழ்ச்சிகள்

பள்ளி குழந்தைகளுக்கு ட்யூஷன்

பள்ளி குழந்தைகளின் படிப்புகள் சிறந்த முறையில் அமைய ட்யூஷன் வகுப்புகள் நடத்துதல்.

கல்லூரி & அரசு வேலை பயிற்சி

கல்லூரி மாணவர்களுக்கும் அரசு வேலைவாய்ப்பு தேர்வுகளுக்கும் சிறப்பு பயிற்சி வகுப்புகள்.

மறைவட்ட இளையோர் கருத்தரங்கம்

மறைவட்ட இளையோர் இயக்கத்தினருக்கு சிறப்பு கருத்தரங்கங்கள் நடத்துதல்.

பெற்றோர் கருத்தரங்கம்

குடும்ப ஆன்மீகம் மற்றும் வளர்ப்பு முறை குறித்த பெற்றோர் கருத்தரங்கங்கள்.

உள்ளிருப்பு தியானம்

ஆன்மீக ஆழத்தை வளர்க்க உள்ளிருப்பு தியான நிகழ்ச்சிகள் நடத்துதல்.

மருத்துவ முகாம்

சமூக மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்தல்.

அருட்சகோதர/ரிகள் கருத்தரங்கம்

அருட்சகோதரிகள் மற்றும் அருட்சகோதரர்களுக்கான சிறப்பு கருத்தரங்கங்கள்.

இறை அழைத்தல் தயாரிப்பு

அருட்சகோதரியாகவோ அருட்சகோதரராகவோ ஆக விரும்புவோருக்கு தயாரிப்பு வகுப்புகள்.

அருட்தந்தையர் தியானம்

அருட்தந்தையர்களுக்கான சிறப்பு தியான / ஓய்வு நிகழ்ச்சிகள்.

அருட்சடங்கு விழாக்கள்

ஞானஸ்நானம், புதுநன்மை, உறுதிபூசுதல், திருமண விழா போன்றவை நடத்துதல்.

ஆண்டு பெருவிழா

அருட்தந்தையர் மற்றும் அருட்சகோதரியர் அருட்பொழிவு பெருவிழாக்கள் நடத்துதல்.

கணினி வகுப்புகள்

Data Entry, DTP, DCA, C, C++, Java, Python, HTML ஆகிய கணினி வகுப்புகள் நடத்துதல்.

அரங்கத்தை முன்பதிவு செய்யவும்

நிகழ்ச்சிகளுக்கு அரங்கத்தை பதிவு செய்ய பங்கு அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

தொடர்பு கொள்ளுங்கள்