சிவகாசி மரியானுஸ் நகரில் உள்ள ஒரு புனித வழிபாட்டு, செபம் மற்றும் சமூக இடம். கடவுளின் அன்பை அனுபவிக்க அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்.

அருட்பணி. I. அற்புதசாமி
பங்குத் தந்தை
பங்கின் ஆன்மீக, கல்வி மற்றும் சமூக நிகழ்வுகளுக்கான நவீன பல்நோக்கு அரங்கம்.
மேலும் அறியதிருப்பலி வாசகங்கள் ஏற்றப்படுகின்றன...

“என்றும் வாழும் எல்லாம் வல்லவரே! உம்மை முன்னிட்டு தன் வாழ்வை அர்ப்பணித்தார் புனித யாக்கோபு. இவரின் மறைசாட்சி இறப்பால், மற்ற திருத்தூதர்களை திடப்படுத்தினீர். உம் பணி இவ்வுலகில் நிறைவேற முதன்முதலாக தன் வாழ்வை இழந்த புனித யாக்கோபை போல, உமக்கும், உம் வார்த்தைகளும் நாங்கள் என்றும், சான்று பகர்ந்து வாழ உம் வரம் தாரும் தந்தையே.”
இவர் செபதேயுவின் மகன். திருத்தூதரான யோவானின் சகோதரர். நமதாண்டவர் இயேசு கிறிஸ்து ஆற்றிய முக்கிய புதுமைகளின்போது உடனிருந்தவர். இவர் ஏரோது அரசனால் கொல்லப்பட்டார். இவர் பயன்படுத்திய சில பொருட்களும், திருப்பண்டமும் ஸ்பெயின் நாட்டிலுள்ள கம்போஸ்தெல்லா என்ற இடத்தில் வைக்கப்பட்டது. ஸ்பெயின் நாடு முழுவதும் இவரின் பக்தியால் பரப்பப்பட்டது. அந்நாட்டில் இப்புனிதரின் பெயரில் பெரிய பேராலயம் கட்டப்பட்டுள்ளது. யாக்கோபின் உடன்பிறந்த சகோதரர் ஒருவர் இவரின் பெயரில் திருவிவிலியத்தில் "யாக்கோபு" என்னும் திருமுகம் ஒன்றை எழுதியுள்ளார். இயேசுவின் இடப்புறத்திலும், வலப்புறத்திலும் இருக்க வேண்டுமென்று ஆசை கொண்டவர் இவர். இதனால் மற்ற சீடர்களின் கோபத்திற்கும் ஆளாக்கப்பட்டார். ஆண்டவர் இயேசுவைப் பற்றி அறிவிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஆண்டவர் மேல் அளவில்லா அன்பு கொண்டதால்தான், இயேசு தன்னை அழைத்தவுடனே அவரை பின் தொடர்ந்துச் சென்றார். இயேசுவின் திருத்தூதர்களில் மிக இளம்வயதில் முதலாவதாக இறந்தவர் புனித யாக்கோபு.
அன்னை மரியாவின் விண்ணேற்பு திருநாள், மேலும் திருச்சபை பாதுகாவலர் திருநாள்.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழா.
"ஆன்மீக நிகழ்ச்சிகள் மற்றும் திருப்பலிகளுக்காக மாதா டிவியின் நேரடி ஒளிபரப்பைப் பாருங்கள்."
இணையதளத்தில் நேரலையில் காணவும்தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாகுக. தொடக்கத்தில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
Read More