A sacred place of worship, prayer, and community in Mariyanus Nagar, Sivakasi. Everyone is welcome to experience God's love.

Rev. Fr. I. Arputhasamy
Parish Priest
Loading readings...

“விண்ணுக்கும், மண்ணுக்கும் ஆண்டவராகிய கடவுளே! நம்பிக்கையை பாதுகாக்கவும், இறைப்பணியை மேன்மைப்படுத்தவும் புனித ஐந்தாம் பயசை தேர்ந்தெடுத்தீர். உமது பராமரிப்பினால் அவர் வழியாக திருச்சபையை வளர செய்தீர். அவருடைய வேண்டுதலின் பயனாக நாங்கள், உமது உயிருள்ள நம்பிக்கை பெற்று, திருச்சபையை வளரச்செய்ய எமக்கு உம் வரம் தாரும்.”
இவர் தொமினிக்கன் குருத்துவ சபையில் சேர்ந்து, குருப்பட்டம் பெற்றபின் கல்லூரிகளில் மறைக்கல்வி கற்றுக்கொடுத்தார். பின்னர் இவர் ஆயராகவும், கர்தினாலாகவும், 1566 ஆம் ஆண்டில் திருத்தந்தையாகவும் உயர்த்தப்பட்டார். 16 ஆம் நூற்றாண்டில் திருச்சபையில் திரிதெந்தின் பொதுசங்கம் மிகவும் புகழ் பெற்றதாக இருந்தது. இச்சங்கத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களை செயல்படுத்துவதில் இவர் பெரும்பங்கு வகித்தார். இதோடு துருக்கி நாட்டு மக்களால் திருச்சபைக்கு ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டது. இவர்களின் சீற்றத்தையும், வெறியையும் திருத்தந்தை சந்திக்க வேண்டியதாக இருந்தது. அப்போது குருமடங்களுக்குள் இவர் பெரிய பெரிய சீர்திருத்தங்களை கொண்டுவந்தார். அப்போது புதிதாக திருத்தம் பெற்ற திருப்பலி நூல்களையும் வெளியிட்டார். இத்தோடு புதிய திரிதெந்தின் மறைக்கல்வி நூல் ஒன்றையும் வெளியிட்டார். இந்நூல்களின் மூலம் திருச்சபையின் வழியாக தோன்றிய குறைபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இவர் நோயாளிகளுக்கென்று பல மருத்துவமனைகளை கட்டினார். உணவின்றி தவித்து, வறுமையில் வாடுவோரின் கண்ணீரைத் துடைத்தார். இதனால் இங்கிலாந்து அரசி முதல் எலிசபெத்திடமிருந்தும், இத்தாலி நாட்டு அரசன் மாக்சிமில்லியானிடமிருந்தும், ஹாலந்து நாட்டிலும் துருக்கியர்களால் கடும் போர் மூண்டது. இந்த போரின் மூலம் வந்த கடுமையான எதிர்ப்புகளையும் தைரியத்துடன் சந்தித்தார். இதனால் ஒரு பெரிய கடற்படையை திரட்டி, லெப்பான்றோ என்ற வளைகுடாவில் துருக்கியர்களோடு போரிட்டு வெற்றியும் பெற்றார். இறைவனோடு இடைவிடாமல் பல மணி நேரம் இணைந்து செபித்த திருத்தந்தை, திருச்சபையில் பல சீர்த்திருத்தங்களை கொண்டுவந்து, அதில் வெற்றியும் பெற்றார், இவர் கடுமையான உண்ணாநோன்புகள் இருந்து செபித்தார். இவர் திருத்தந்தையாய் இருந்தபோதிலும், தமது தொமினிக்கன் சபை ஒழுங்குகளை விடாமல் கடைபிடித்து வந்தார்.
The feast of Assumption of the Blessed Virgin Mary, also the parish feast day.
Celebration of the birth of Jesus Christ.
"Watch Madha TV live telecast for spiritual programs and masses."
Watch Live on Website