A sacred place of worship, prayer, and community in Marianus Nagar, Sivakasi. Everyone is welcome to experience God's love.

Rev. Fr. I. Arputhasamy
Parish Priest
Loading readings...

“அன்பான இறைவா! புனித பெர்னார்டு இறைவன் மேல் தணியாத தாகம் கொண்டு வாழ்ந்தார். நாங்களும் எங்களின் சொல், செயல், சிந்தனைகளில் உம்மை பற்றிக்கொண்டு, என்றும் உமக்குரியவர்களாக வாழ வரம் தாரும்.”
இவர் ஓர் சாதாரண குடும்பத்தில் மகனாக பிறந்தார். இவர் இறையியலையும், மெய்யியலையும், திருச்சபை சட்டங்களையும் கற்றுத் தேர்ந்தார். இவரது பெற்றோர் இவரின் கல்லூரி படிப்பை முடித்தபின், பணக்கார பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்க எண்ணினார். ஆனால் பெர்னார்டு இதை வெறுத்தார். இவரின் மனம் எப்போதும் ஆன்மீக வாழ்வையே நோக்கி சென்றது. இதனால் தன்னுடைய மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் சேர்ந்து பணியாளராக செயல்பட்டார். இவரின் பணியால் அம்மறைமாவட்ட மக்கள் ஏராளமான பயனை பெற்றனர். இவர் இறக்கும் வரை மறைமாவட்ட குருக்களின் கல்லூரியில் பணியாற்றினார். இவர் 1008 ல் அல்லது 1009 ல் இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. இவர் நோவரா என்ற ஊரில் அடக்கம் செய்யப்பட்டு, அவர் கல்லறையின் மேல் பேராலயம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. பின்னர் இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்திற்கும் இடையில் இவர் நோயாளிகளை பராமரிப்பதற்கென ஓர் இல்லம் தொடங்கினார். நாளடைவில் இவ்வில்லத்தை புனித அகுஸ்தினார் சபையை சார்ந்தவர்கள் கைப்பற்றினர். இப்போது அந்நாடுகளுக்கு சுற்றுலாவிற்கு வரும் மக்கள் அவ்வில்லத்தில் இலவசமாக தங்கி, தங்களின் சுற்றுலாவை மேற்கொள்கின்றனர்.
The feast of Assumption of the Blessed Virgin Mary, also the parish feast day.
Celebration of the birth of Jesus Christ.
"Watch Madha TV live telecast for spiritual programs and masses."
Watch Live on Website